முதன் முறையாக தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைத் திட்டம்

கோவை, நவம்பர் 23  

இந்தியாவில் முதன் முறையாக தமிழகத்தில் ரூ.12,000 கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகத் திட்டங்கள் தொடர்பாக சென்னையில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரிஇன்று  ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று துறைச் சார்ந்த திட்டங்கள் தொடர்பான அறிக்கையை வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் தொடர்பாக 81 திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ரூ.12,000  கோடி செலவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்படும். மேலும், சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்கப்படும். 

இந்தியாவில் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. விபத்து ஏற்படக்கூடிய 61 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் ரூ.2,300 கோடி செலவில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க கோதாவரி ஆற்றிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் 3,000 டிஎம்சி தண்ணீரை, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றுக்கு திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...