கோவை, நவம்பர் 23
கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ராஜவேல் வழக்கறிஞர்களுடன் மோதல் போக்கினை கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதியின் இத்தகைய நடவடிக்கையினைக் கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை அந்த ஒரு நீதிமன்றத்தை மட்டும் காலவரையின்றி புறக்கணிப்பது எனவும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜவேலைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் ராஜவேல் வழக்கறிஞர்களுடன் மோதல் போக்கினை கடைப்பிடித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதியின் இத்தகைய நடவடிக்கையினைக் கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கும் வரை அந்த ஒரு நீதிமன்றத்தை மட்டும் காலவரையின்றி புறக்கணிப்பது எனவும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.