கோவை, நவம்பர் 23
தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக கால அவகாசம், ஒரு சில பாடங்களுக்கு விலக்கு அளித்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் வேறு ஒருவர் தேர்வு எழுத அனுமதித்தல் போன்ற பல சலுகைகள் உள்ளன. உரிய மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே அத்தகைய சலுகைகளை வழங்க இயலும். தேர்வு காலங்களில் மேற்படி மருத்துவ சான்றை மாற்றுத் திறனாளிகள் எளிமையாக பெற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 2017 நவம்பர் 29-ம் தேதியன்று காலை முற்பகலில் கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் எம்.சந்திரசேகரன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், மருத்துவ சான்று கோரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் சான்றிதழ்களை பெற்றுப் பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக கால அவகாசம், ஒரு சில பாடங்களுக்கு விலக்கு அளித்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் வேறு ஒருவர் தேர்வு எழுத அனுமதித்தல் போன்ற பல சலுகைகள் உள்ளன. உரிய மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே அத்தகைய சலுகைகளை வழங்க இயலும். தேர்வு காலங்களில் மேற்படி மருத்துவ சான்றை மாற்றுத் திறனாளிகள் எளிமையாக பெற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகின்ற 2017 நவம்பர் 29-ம் தேதியன்று காலை முற்பகலில் கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் எம்.சந்திரசேகரன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், மருத்துவ சான்று கோரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் சான்றிதழ்களை பெற்றுப் பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.