தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு ஏற்பாடுகள்- ஆட்சியர் தகவல்

கோவை, நவம்பர் 23

தேர்வுகள் எழுதும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று பெற சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு. த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதுவதற்காக கால அவகாசம், ஒரு சில பாடங்களுக்கு விலக்கு அளித்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதில் வேறு ஒருவர் தேர்வு எழுத அனுமதித்தல் போன்ற பல சலுகைகள் உள்ளன. உரிய மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே அத்தகைய சலுகைகளை வழங்க இயலும். தேர்வு காலங்களில் மேற்படி மருத்துவ சான்றை மாற்றுத் திறனாளிகள் எளிமையாக பெற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 2017 நவம்பர் 29-ம் தேதியன்று காலை முற்பகலில் கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் எம்.சந்திரசேகரன் மேற்பார்வையில் சிறப்பு மருத்துவக் குழு கோவை இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில், மருத்துவ சான்று கோரும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களை மருத்துவர் பரிசோதித்து வழங்கும் சான்றிதழ்களை பெற்றுப் பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...