நவம்பர் 23
விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைக்கும் கந்து வட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை பலர் விமர்சனம் செய்ததுடன், சினிமாத்துறையில் நிலவி வரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து கமல் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும், நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள். என குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைக்கும் கந்து வட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை பலர் விமர்சனம் செய்ததுடன், சினிமாத்துறையில் நிலவி வரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து கமல் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும், நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள். என குறிப்பிட்டுள்ளார்.