ஆட்டிப்படைக்கும் கந்துவட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் - நடிகர் கமல்ஹாசன்

நவம்பர் 23

விவசாயிகள் முதல் சினிமாக்காரர்கள் வரை ஆட்டிப்படைக்கும் கந்து வட்டிக் கொடுமையை தடுத்தாக வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கந்துவட்டிக் கொடுமையால் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால், அண்மைக்காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் கமல்ஹாசன் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இதனை பலர் விமர்சனம் செய்ததுடன், சினிமாத்துறையில் நிலவி வரும் கந்துவட்டிக் கொடுமை குறித்து கமல் மவுனம் காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

இந்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், கந்துவட்டிக் கொடுமை ஏழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும், நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள். என குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...