கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் - நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்

கோவை, நவம்பர் 23:

கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவம் தமிழ் திரையுலகின் நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கந்து வட்டியினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கந்துவட்டி பிரச்சனைக்கு தீர்வுகாண அரசு தலையிட வேண்டும். கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். என்றார். 

தொடர்ந்து, பத்மாவதி திரைப்படம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பல மொழி, கலாச்சாரம் உள்ள ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியினரே மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாற்றம் வேண்டுமென அரசியலுக்கு வருவது தவறல்ல. நடிகர் கமல்ஹாசன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, குற்றச்சாட்டே கூறக்கூடாது என மிரட்டக்கூடாது. நான் அரசியலுக்கு வரமாட்டேன். குடிமகனாக வாழவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார். 

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...