கோவை, நவம்பர் 23:
கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவம் தமிழ் திரையுலகின் நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கந்து வட்டியினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கந்துவட்டி பிரச்சனைக்கு தீர்வுகாண அரசு தலையிட வேண்டும். கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். என்றார்.
தொடர்ந்து, பத்மாவதி திரைப்படம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பல மொழி, கலாச்சாரம் உள்ள ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியினரே மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாற்றம் வேண்டுமென அரசியலுக்கு வருவது தவறல்ல. நடிகர் கமல்ஹாசன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, குற்றச்சாட்டே கூறக்கூடாது என மிரட்டக்கூடாது. நான் அரசியலுக்கு வரமாட்டேன். குடிமகனாக வாழவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
கந்துவட்டி பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. இச்சம்பவம் தமிழ் திரையுலகின் நிலைமையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கந்து வட்டியினால் ஏராளமான தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கந்துவட்டி பிரச்சனைக்கு தீர்வுகாண அரசு தலையிட வேண்டும். கந்துவட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்போம். என்றார்.
தொடர்ந்து, பத்மாவதி திரைப்படம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், எவ்வளவு மோசமான நாட்டில் வாழ்கிறோம் என்பதை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பல மொழி, கலாச்சாரம் உள்ள ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சியினரே மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாற்றம் வேண்டுமென அரசியலுக்கு வருவது தவறல்ல. நடிகர் கமல்ஹாசன் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, குற்றச்சாட்டே கூறக்கூடாது என மிரட்டக்கூடாது. நான் அரசியலுக்கு வரமாட்டேன். குடிமகனாக வாழவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.