டெங்கு காய்ச்சலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் 30 பேர் அனுமதி

கோவை, நவம்பர் 20

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக டெங்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கோவையை பொறுத்தவரையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 60 முதல் 70 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு அனுமதியாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இன்றைய நிலவரப்படி, அம்மருத்துவமனையில் 7 ஆண்கள், 14 பெண்கள், 5 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் என மொத்தம் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரங்களை காட்டிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல் குறைந்துள்ளது.

இந்த 30 பேரில் கோவை மாவட்டத்தில் இருந்து 16 பேரும், திருப்பூரில் இருந்து 9 பேரும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 பேரும் திண்டுக்கள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...