ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 20: ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக பீளமேடு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு, குடியிருப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பீளமேடு ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடை பெற்றுவந்தன . 2011-ஆம் ஆண்டு ரயில்வே போராட்டக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு சார்பில் ரூ. 30.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன . 

இதனிடையே, 2011-ம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் காண்பித்த வரைபடத்தில் சப்-வே இடம் பெறும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் துவக்கப்படாததால் குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

எனவே, ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வரும் 28-ம் தேதியன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...