ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோவை, நவம்பர் 20: ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக பீளமேடு பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பீளமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு, குடியிருப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பீளமேடு ரயில்வே மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடை பெற்றுவந்தன . 2011-ஆம் ஆண்டு ரயில்வே போராட்டக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழக அரசு சார்பில் ரூ. 30.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன . 

இதனிடையே, 2011-ம் ஆண்டு சேலம் ரயில்வே கோட்டம் காண்பித்த வரைபடத்தில் சப்-வே இடம் பெறும் என குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் துவக்கப்படாததால் குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தற்போது வரை அதற்கான பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.

எனவே, ரயில்வே மேம்பாலத்தில் சப்-வே அமைக்காத சேலம் ரயில்வே கோட்டத்தைக் கண்டித்து வரும் 28-ம் தேதியன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...