கோவை, நவம்பர் 20: கோவையில் நிலம் வாங்கித் தருவதாக ரூ. 33 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு கந்தன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அழகர்சாமி என்பவர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகவும், மாதத் தவணையில் பணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார். அழகர்சாமி உறுதியளித்தன் பேரில் லட்சுமியின் சுய உதவிக் குழுக்களில் இருந்தவர்கள் மாதத் தவணையின் அடிப்படையில் பணம் செலுத்தி முடித்துள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலத்தை அளிக்காமல் ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக, லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் அழகர்சாமிக்குக் காவல்துறையினர் சாதகமாகச் செயல்படுவதாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறார். கடந்த 2011-ம் ஆண்டு கந்தன் கார்டன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் அழகர்சாமி என்பவர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ளவர்களுக்கு ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் நிலம் வாங்கித் தருவதாகவும், மாதத் தவணையில் பணம் செலுத்தலாம் எனவும் கூறியுள்ளார். அழகர்சாமி உறுதியளித்தன் பேரில் லட்சுமியின் சுய உதவிக் குழுக்களில் இருந்தவர்கள் மாதத் தவணையின் அடிப்படையில் பணம் செலுத்தி முடித்துள்ளனர். இருப்பினும், பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கான நிலம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலத்தை அளிக்காமல் ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக, லட்சுமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும், தலைமறைவாக இருந்து வரும் அழகர்சாமிக்குக் காவல்துறையினர் சாதகமாகச் செயல்படுவதாகவும், மோசடியில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.