கோவை, நவம்பர் 20: அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பேருந்து நடத்துநர் சிவக்குமாரின் மனைவி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசு பேருந்து நடத்துநர் சிவக்குமாரும் ஒருவர்.
இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவக்குமாரின் மனைவி சௌந்தரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், கணவரை இழந்து 6 மாத கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசு பேருந்து நடத்துநர் சிவக்குமாரும் ஒருவர்.
இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவக்குமாரின் மனைவி சௌந்தரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், கணவரை இழந்து 6 மாத கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
