கோவை, நவம்பர் 18: பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் ஒருவர் மனு அளித்தார்.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (74). கோவையில் தலைமைக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு மனுவுடன் வந்தார். மனுவில், அங்காத்தாள், சரவணக்குமார் என்ற இருவர் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'பத்திரம் ஒன்றை திருடியதாக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முற்றிலும் போலியானது. இது தொடர்பாக போலீசாரிடம் தொடர் புகார் அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன். என்றார்.
இதே போல், விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெண் காவலர் ஒருவர் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு அளிக்க வந்தார்.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (74). கோவையில் தலைமைக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு மனுவுடன் வந்தார். மனுவில், அங்காத்தாள், சரவணக்குமார் என்ற இருவர் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'பத்திரம் ஒன்றை திருடியதாக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முற்றிலும் போலியானது. இது தொடர்பாக போலீசாரிடம் தொடர் புகார் அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன். என்றார்.
இதே போல், விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெண் காவலர் ஒருவர் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு அளிக்க வந்தார்.