பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் மனு

கோவை, நவம்பர் 18: பொய் வழக்கு தொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் முன்னாள் காவலர் ஒருவர் மனு அளித்தார்.



கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (74). கோவையில் தலைமைக்காவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் இன்று காலை பி.ஆர்.எஸ். மைதானத்திற்கு மனுவுடன் வந்தார். மனுவில், அங்காத்தாள், சரவணக்குமார் என்ற இருவர் தன் மீது பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது குறித்து காவல்துறையிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'பத்திரம் ஒன்றை திருடியதாக என்மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இது முற்றிலும் போலியானது. இது தொடர்பாக போலீசாரிடம் தொடர் புகார் அளித்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. எனவே, காவல்துறை இயக்குனரிடம் மனு அளிக்க வந்துள்ளேன். என்றார்.

இதே போல், விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெண் காவலர் ஒருவர் குறை தீர்ப்பு முகாமிற்கு மனு அளிக்க வந்தார்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...