காவல்துறை குறைதீர்ப்பு முகாமில் 1,242 போலீசார் பங்கேற்பு


கோவை, நவம்பர் 18: மேற்குமண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு முகாமில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த 1,242 போலீசார் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி டி.ஜி.பி.யிடம் அளித்தனர்.



மனுக்களில், இடமாறுதல், பதவி உயர்வு, வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு கோவையில் இருந்து மட்டும் 510 போலீசார் கலந்து கொண்டனர். மேலும், திருப்பூரில் இருந்து 210 பேரும், நீலகிரியில் இருந்து 110 காவலர்களும் கலந்து கொண்டு மனு அளித்தனர்.



மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ராஜேந்திந்திரன் தெரிவித்தார்.



இந்த முகாமில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் மேற்குமண்டல காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...