கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டிக்கடத்த முயற்சி : மர்ம நபர்கள் துணிகரம்

கோவை, நவம்பர். 17

பாதுகாப்பு நிறைந்த கோவை மத்திய சிறை வளாகத்தில் இன்று அதிகாலை 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்த முயற்சி நடந்துள்ளது.



கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அங்கு உள்ள டி.ஐ.ஜி அலுவலகம் அருகே இருந்த சந்தன மரங்கள் சுமார 20 " சுற்றளவுக்கு வளர்ந்திருந்தன.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் சிறை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டினர். 



 அதோடு, மரத்தை வெட்ட பயன்பட்ட ரம்பம், அரிவாள்,கடப்பாறை ஆகியவற்றை மர்ம நபர்கள் அதே இடத்தில் போட்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர். .



இது தொடர்பாக, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மத்திய சிறையின் முதல் அடுக்கில் தமிழக போலீசார், இரண்டாம் அடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மூன்றாவதாக சிறை காவலர்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதால், அதன்  பாதுகாப்பு குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...