அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் - திண்டுக்கல் சீனிவாசன்

கோவை, நவம்பர் 16: அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன் என்றும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தாலும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான கால்கோள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஆளுநர் ஆய்வு குறித்து உள்ளாட்சிதுறை அமைச்சரின் கருத்தே தனது கருத்து. தூய்மை இந்தியா திட்டத்தில் ஆளுநர் நல்ல பணிகளையே செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் ஆளுநர் ஆய்வு நடத்தி இருந்தால் ஏற்று கொண்டிருக்க வேண்டும். 

அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டால் வரவேற்பேன். அமைச்சர் இல்லாமல், அரசு அதிகாரிகளை வைத்து மட்டும் கூட்டம் நடத்தியதால் மாநில உரிமை பறிபோகாது. மத்திய அரசு திட்டத்தின் செயல்பாட்டையே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய ஆளுநர் பன்வாரிலால் வேறு மாநில ஆளுநராக இருந்த இடங்களில் இது போன்ற ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்றார்.

இதைத்தொடர்ந்து, பா.ஜ.க தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அதிமுக கட்சி அழிந்துவிடும் என்றும், ஊழல் ஆட்சி எனக் கூறியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், அதிமுக கட்சியை யாராலும் அழிக்க முடியாது. இது மக்களுக்கான ஊழலற்ற ஆட்சி. எதிர்வினை ஆற்றும் அளவிற்கு அவர்கள் விமர்சனம் செய்யவில்லை. கட்சிகளை பற்றி சந்தர்பம் வரும்போது விமர்சனம் செய்வோம். இவ்வாறு கூறினார். 

கோவை ஆணைகட்டியில் உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை அனைத்து நடவடிக்கைகளும எடுத்த நிலையிலும், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்திருப்பது இயற்கையானது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...