கோவை, நவம்பர் 15
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
தங்களது கோரிக்கைகள் குறித்து முதமைச்சருக்கு தெரிவித்து, தீர்வு காணப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்துள்ளதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆளுநரை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தினர் சந்தித்தனர். காலை முதல் காத்திருந்தவர்கள் மாலை ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,60 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்களது மனைவிக்கும் அரசு பேருந்துகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மலுமிச்சம்பட்டியில் நிறைவடைந்துள்ள தொகுப்பு வீடுகளை முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளை சந்திக்கவே முடியாத சூழ்நிலையில் தங்களை நேரில் சந்தித்து ஆளுநர் மனுவை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என ஆளுநர் உறுதி அளித்தாக தெரிவித்தனர்.
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
தங்களது கோரிக்கைகள் குறித்து முதமைச்சருக்கு தெரிவித்து, தீர்வு காணப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்துள்ளதாக முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
திருப்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், கோவை விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஆளுநரை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நலச்சங்கத்தினர் சந்தித்தனர். காலை முதல் காத்திருந்தவர்கள் மாலை ஆளுநரை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.

இதில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் கூடுதல் விழுக்காடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,60 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவர்களது மனைவிக்கும் அரசு பேருந்துகளில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், கோவை மலுமிச்சம்பட்டியில் நிறைவடைந்துள்ள தொகுப்பு வீடுகளை முன்னாள் ராணுவத்தினர் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள், முதலமைச்சர், அமைச்சர்கள் உட்பட அதிகாரிகளை சந்திக்கவே முடியாத சூழ்நிலையில் தங்களை நேரில் சந்தித்து ஆளுநர் மனுவை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தப்படும் என ஆளுநர் உறுதி அளித்தாக தெரிவித்தனர்.