கோவை, நவம்பர் 15
கோவை மாவட்டம் காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தில் தொழில் பயிற்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நா. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்திற்குபட்ட அலுவலகங்களில் ஒரு வருட ஐ.டி.ஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கு வரைவாளர்கள் (சிவில்) (3 நபர்கள்) வயர்மேன்கள் மற்றும் எலக்ட்ரீசியன்கள் (8 நபர்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர் இவர்களுக்கான நேர்காணல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, தகுதியுள்ள நபர்கள் கல்வி சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் மற்றும் இதரச் சான்றுகள் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே, தொழிற்பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த தேர்ச்சி பெறும் தொழிற் பழகுனருக்கு மாதம் ரூ.7,709 வீதம் உதவி தொகை வழங்கப்படும் என காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் காடம்பாறை மின்உற்பத்தி வட்டத்தில் தொழில் பயிற்சிக்கு நேர்காணல் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் நா. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
காடம்பாறை மின் உற்பத்தி வட்டத்திற்குபட்ட அலுவலகங்களில் ஒரு வருட ஐ.டி.ஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கு வரைவாளர்கள் (சிவில்) (3 நபர்கள்) வயர்மேன்கள் மற்றும் எலக்ட்ரீசியன்கள் (8 நபர்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர் இவர்களுக்கான நேர்காணல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, தகுதியுள்ள நபர்கள் கல்வி சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் மற்றும் இதரச் சான்றுகள் ஆகியவற்றின் உண்மை மற்றும் நகல் ஆவணங்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே, தொழிற்பயிற்சி முடிந்து சான்று பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த தேர்ச்சி பெறும் தொழிற் பழகுனருக்கு மாதம் ரூ.7,709 வீதம் உதவி தொகை வழங்கப்படும் என காடம்பாறை மின் உற்பத்தி வட்டம், மேற்பார்வைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.