கோவை, நவம்பர் 15: கோவையில் தமிழக ஆளுநர் தலைமையில் கூட்டம் நடைபெறுவதை கண்டித்து தபெதிக அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட அதிகாரிகளை சந்தித்து தமிழக ஆளுநர் உத்திரவு வழங்குவது மாநில உரிமைகளை பறிக்கின்ற நசுக்குகின்ற செயல் என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னயணன் குற்றம் சாட்டினார்.
புதுவையில் துணை நிலை ஆளுநரால் செய்யப்படும் செயலை தமிழகததில் ஆளுநர் பன்வாரிலால் துவங்கி வைத்து இருக்கின்றார் என்றும் தமிழக அமைச்சரவை செய்ய வேண்டியதை தற்போதை ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.
தமிழக அரசு பா.ஜ.கவின் பினாமி அரசாக, எடுபிடி அரசாக நடந்து வரும் நிலையில் கவர்னர் இந்த நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றார் எனவும், அதிமுக பெயரில் கட்சி வைத்து நடத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி இதை எப்படி அனுமதித்தார் எனவும் கேள்வி எழுப்பிய கு.ராமகிருஷ்ணன், அண்ணாவின் கொள்கைகளை அதிமுக குழி தோண்டி புதைத்து வருகின்றது எனவும், ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளை பறிக்கும் செயல் எனவும் இதை தபெதிக அனுமதிக்காத எனவும், சுதந்திரத்திற்கு பின்னர் எந்த ஒரு ஆளுநரும் செய்யாத நிகழ்வை தற்போதைய ஆளுநர் செய்கின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து போராட்டம் நடத்தி தபெதிக அமைப்பினரை காவல் துறையினர் குண்டுகட்டாக கைது செய்து அழைத்து சென்றனர்.