டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை, நவம்பர் 14

அன்னூரில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சுகாதார சீர்கேட்டினை கண்டுகொள்ளாத அதிகாரிகளே இதற்குக் காரணம் என கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளியான குணசேகரன் என்பவரது மகன் சுதர்சன் (14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த சனிக்கிழமையன்று காலை சுதர்சன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சாதாரண காய்ச்சலுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் குணமடையாததால் ஞாயிறன்று மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரின் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், டெங்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் உயிரிழந்தார்.

இதனிடையே, டெங்குவால் பள்ளி மாணவன் உயிரிழந்ததை அறிந்த ஊர்மக்கள் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்தனர். பின்னர் தங்கள் கிராமத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டினை சீர்படுத்த அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதாலேயே சிறுவன் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டிய கிராம மக்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் திடீர் என அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் சுகாதார பணிகளை உடனடியாக முடுக்கி விடுவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...