ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல நிர்பந்திப்பதை கண்டித்து அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, நவம்பர் 13: 

ஒரே வண்டியில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்ல வலியுறுத்தும் செஞ்சிலுவைச்சங்க நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்போரை அவரவர் வீட்டிற்கு கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி சேவை செயல்பட்டு வருகிறது. இந்த அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. 

சமீபகாலமாக அரசின் அமரர் ஊரிதியில் ஒரே நேரத்தில் மூன்று பிரேதங்களை எடுத்துச்செல்வதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் மாவட்ட திட்ட உதவியாளர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் நிர்பந்தத்தினால் தான் இது போன்ற அவலம் ஏற்படுகிறது என்றும், முறையான ஊதியம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் கூறி அரசு அமரர் ஊர்தி வாகன ஓட்டுனர்கள் இன்று காலை கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து அமரர் ஊர்தி ஓட்டுனர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கோவையில் 10 அமரர் ஊர்திகள் உள்ளன. ஆனால், 2 மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிக அளவில் பிரேதங்கள் வரும்போது அவற்றை மொத்தமாக அரசு வாகனத்தில் ஏற்றி அனுப்புகின்றனர். இதனால், ஓட்டுனர்களுக்கும் பிரேதத்தின் உறவினர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பலமுறை அவர்களால் ஓட்டுனர்கள் தாக்கப்படுகின்றனர்.

அதோடு, 525 ரூபாய் ஊதியம் தருவதாக கூறிவிட்டு தற்போது வெறும் 215 ரூபாய் மட்டுமே ஊதியமாக கொடுக்கின்றனர். பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வரும் செஞ்சிலுவை சங்க நிர்வாகம் ஓட்டுனர்களின் உழைப்பை திருடுகின்றது. இதைத்தடுக்க வலியுறுத்தியே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்ப்பார்த்திருக்கிறோம்.



இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...