கோவை, நவம்பர் 13
தொழில்முறை கல்வியாளர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் என பல்வேறு துறையில் சாதனை படைத்து வரும் திரு. சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது வழங்கப்பட்டது.

புதுதில்லியில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் எட்டு நாடுகளிலிருந்து சர்வதேச புத்தகங்களின் தலைமைப் பதிப்பாளர்கள் பங்கேற்று அவருக்கு விருதினை வழங்கி கவுரவித்தனர். மேலும், சிறந்த உலக சாதனை யூனியன் புத்தகத்தில் 2018 ஆண்டின் பதிப்பில் இந்த வருட இந்தியர்கள் பிரிவில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
சுப்ரமணியன் 1978-ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின் முதன்மை ஆராய்ச்சித் திட்டத்தில் முதன்மை ஆராய்ச்சியாளர், கற்றல் நிபுணராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது, இந்திய அரசின் தரக் கவுன்சில் உறுப்பினரான அவர் கோவையில் உள்ள இந்திய ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார்.