சர்வதேச எஸ்ஐபி அபாகஸ் போட்டியில் 3600 குழந்தைகள் பங்கேற்பு

கோவை, நவம்பர் 12:

எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 3600 குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, தன்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200 குழந்தைகளும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3400 குழந்தைகளும் பங்கேற்றனர். இப்போட்டியினை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 நிமிடங்களில் 200 வினாக்களுக்கு போட்டியாளர்கள் விடையளித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற 600 போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்தப் போட்டி லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்துள்ளது.



இதுகுறித்து எஸ்ஐபி அகாடமி இந்தியா-வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனர் திரு. தினேஷ் விக்டர் கூறுகையில், 'இது போன்ற போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்பதால் மன ஒருமைப்பாடு, காட்சி நினைவு, எண்திறன், கவனிக்கும் திறன் உள்ளிட்டவை மேம்படுகிறது. மேலும், அவர்கள் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்' என்றார்.



Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...