கோவை, நவம்பர் 12:
எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 3600 குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, தன்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200 குழந்தைகளும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3400 குழந்தைகளும் பங்கேற்றனர். இப்போட்டியினை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 நிமிடங்களில் 200 வினாக்களுக்கு போட்டியாளர்கள் விடையளித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற 600 போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்தப் போட்டி லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து எஸ்ஐபி அகாடமி இந்தியா-வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனர் திரு. தினேஷ் விக்டர் கூறுகையில், 'இது போன்ற போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்பதால் மன ஒருமைப்பாடு, காட்சி நினைவு, எண்திறன், கவனிக்கும் திறன் உள்ளிட்டவை மேம்படுகிறது. மேலும், அவர்கள் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்' என்றார்.

எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 3600 குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் எஸ்ஐபி அகாடமி இந்தியா சார்பில் சர்வதேச அபாகஸ் போட்டி நடைபெற்றது. இதில், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், இலங்கை, தன்சானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200 குழந்தைகளும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 3400 குழந்தைகளும் பங்கேற்றனர். இப்போட்டியினை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என். ஹரிஹரன் துவக்கி வைத்தார்.
6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 நிமிடங்களில் 200 வினாக்களுக்கு போட்டியாளர்கள் விடையளித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற 600 போட்டியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், இந்தப் போட்டி லிம்கா புக் ஆப் ரெக்கார்டிலும் இடம்பிடித்துள்ளது.

இதுகுறித்து எஸ்ஐபி அகாடமி இந்தியா-வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனர் திரு. தினேஷ் விக்டர் கூறுகையில், 'இது போன்ற போட்டிகளில் குழந்தைகள் பங்கேற்பதால் மன ஒருமைப்பாடு, காட்சி நினைவு, எண்திறன், கவனிக்கும் திறன் உள்ளிட்டவை மேம்படுகிறது. மேலும், அவர்கள் தன்னம்பிக்கையும் பெறுகின்றனர்' என்றார்.
