ஜெயா டிவி மற்றும் சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் 5-வது நாளாக நீடிக்கும் சோதனை

நவம்பர் 13:

சசிகலாவின் குடும்பத்தினர் விவேக் கிருஷ்ணபிரியா வீடுகள் மற்றும் ஜெயா டிவி அலுவலகத்தில் 5-வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது, 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.

வருமான வரித்துறை ஆபரஷேன் கிளீன் மணி என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை தொடங்கி இருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் கோவை, கர்நாடக மாநிலம் பெங்களூரு, உள்ளிட்ட இடங்களில் உள்ள சசிகலாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9 ஆம் தேதி சோதனையை தொடங்கினர்.

இந்த வருமான வரித்துறை சோதனை 5-வது நாளாக இன்றும் சில இடங்களில் நீடித்து வருகிறது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விவேக் வீடு மற்றும் ஜெயாடிவி அலுவலகத்திலும் இன்று சோதனை நடந்து வருகிறது. அதேபோல், கொடநாடு கர்சன் டீ எஸ்டேட், காஞ்சிபுரத்தில் உள்ள மிடாஸ் மதுபான ஆலையிலும் சோதனை நீடித்து வருகிறது. கடந்த 9 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு துவங்கிய வருமான வரித்துறை சோதனை 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. 

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...