கேஎம்சிஎச் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை, நவம்பர் 12

கேஎம்சிஎச் புற்றுநோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா இன்று புற்று நோயிலிருந்து குணமடைந்த 300 நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கொண்டாடப்பட்டது.

கேஎம்சிஎச்-யின் புற்றுநோய் மையம் கடந்த 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டு, தற்போது புற்றுநோய் மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றுடன் வளர்ச்சியடைந்துள்ளது. மேலும், இங்கு கதிரியக்க சிகிச்சை, ஆழமான காயம் தவிர்க்கும் எந்திர அறுவை சிகிச்சை, கீமோ சிகிச்சை, பாதிக்கப்பட்ட உடற்பகுதிக்கு மட்டுமான சிகிச்சை, ஹேமட்டோ சிகிச்சை ஆகிய அனைத்துவகை மருத்துவங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகக் கடந்த 6 ஆண்டுகளில், இந்த மையம் 20,000-க்கும் மேலான புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளது. 32000-க்கும் அதிகமானோர் கீமோ சிகிச்சைகளையும், 4000-க்கும் அதிகமானோருக்கு ரேடியோ சிகிச்சைகளையும் அளித்துள்ளது.

இதனிடையே, இன்று கேஎம்சிஎச் மருத்துவமனையில் புற்று நோய் மையத்தின் 6-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அம்மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், "புற்று நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். அதேவேளையில், இரண்டாம் நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வாழ்வு நாட்களையும் நீட்டிக்கச் செய்ய இயலும். வலி நிவாரணநிலை, ஆதரவு நிலை என்ற நிலையிலுள்ள நோயாளிகளுக்கும்கூட வாழும் தரத்தை மேம்படுத்த கேஎம்சிஎச் என்றும் முயற்சிக்கிறது.

சிகிச்சையைப் போலவே நோய்த் தடுப்பும் முக்கியம். தொடர்ந்து பொதுமக்களிடையே நோயைக் கண்டறியவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவி வருகிறது," என்றார்.

இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற 'கலைமாமணி' திரு. மரபின்மைந்தன் முத்தையா, புற்றுநோயிலிருந்து மீண்டவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...