புதுப்பொலிவுடன் வெளியாகியுள்ள மாநகராட்சி வலைதளம்

கோவை, நவம்பர் 12

கோவை மாநகராட்சி தொடர்பான பல்வேறு செய்திகள், தகவல்கள் மற்றும் இ-சேவை வசதிகள் அடங்கியுள்ள மாநகராட்சி வலைதளம், கூடுதல் தகவல்களோடு புதுப்பிக்கப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்படுள்ளது.



புதிதாக வெளியாகியுள்ள இந்த வலைதளத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், வானிலை நிலவரம்,  புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள், மாநகராட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள், வாட்ஸ் ஆப் மற்றும் குறுந்தகவல் மூலமாக புகார் தெரிவிக்கும் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.



மாநகராட்சிக்குட்பட்ட வரித்துறை, பொறியியல், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், நகரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி திட்டம், குப்பை மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய அனைத்து துறைகள் பற்றிய தகவல்களும், அதில் பணிபுரியும் முக்கிய அலுவலர்களின் பெயர்கள், தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய அரசின் சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்வச் பாரத், ஸ்வச்சத்தா போன்ற பல்வேறு திட்டங்களின் வலைதளங்கள் மற்றும் செயலிகளை எளிதாக தொடர்புகொள்வதற்கான வசதிகளும் இந்த  வலைதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.



மேலும், கோவை மாநகரில் உள்ள முக்கிய மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள், சுற்றுலாத் தளங்கள், கோவில்கள், பேருந்து வசதிகள், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நேரம் பற்றிய தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

'இந்த வலைதளத்தை உபயோகித்து, அரசின் பல்வேறு இ-சேவைகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். மேலும், மாநகராட்சி நிர்வாகம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிரத்யேக செயலின் மூலமாக பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதோடு, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் தெரிந்துகொள்ளலாம். இதனால், பொதுமக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையே உள்ள தூரம் வெகுவாக குறையும்' என மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...