ஸ்மார்ட் சிட்டி குறித்து மாநகராட்சி நிர்வாகிகள் ஆலோசனை


கோவை, நவம்பர் 10 

ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. எனவே,  இதற்கான பணிகளைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகம், குளங்களை தூர்வார்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதனிடையே, ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிறுவனத்தால், கோவையில் 'புதுமையான ஸ்மார்ட் சிட்டி' ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் என். நடராஜன், செயற்பொறியாளர்கள் சரவணன், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...