சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கோவை, நவம்பர் 10

கோவை மத்திய சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் பிரபாகரன், சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது மயங்கி விழுந்தார்.

சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, கருமத்தம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் பிரபாகரன், மனோகரன், வேலுச்சாமி ஆகியோர் கடந்த 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் 3 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனைக் கண்டித்து 3 பேரும் கோவை மத்திய சிறையில் இன்று 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கனியூர் சுங்கச்சாவடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கு தொடர்பாக சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட போது, பிரபாகரன் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பிரபாகரன் சூலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...