மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்க பிரத்யேக செயலி அறிமுகம்


கோவை, நவம்பர் 10: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஸ்மார்ட் ட்ரீ, சென்சார் குப்பைத் தொட்டிகள், சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் தன்மையுடைய பைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, தற்போது பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை CCMC Central (Citizens Grievance Redressal App) அறிமுகப்படுத்தியுள்ளது.



மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் நிலவும் குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி, நகரமைப்பு, வரி, தேர்தல், இ-சேவை மற்றும் இதர பிரச்சனைகள் பற்றிய புகார்களை இந்த செயலியின் மூலம் எளிதாக பதியலாம். 

குறிப்பாக, புகாரை பதியும்பொழுது அது தொடர்பான உண்மைத் தன்மையுடைய புகைப்படத்தையும் இணைத்து பதிய வேண்டும். மேலும், புகார் சம்பந்தப்பட்ட மண்டலம், வார்டு மற்றும் பாதிப்புகள் குறித்தும் இச்செயலியில் பதிய வேண்டும்.



புகார் அளித்துமுடித்த பின்பு அதற்கான பிரத்யேக எண் மனுதாரருக்கு வழங்கப்படுகிறது. மேலும், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர் குறித்த விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

முன்னதாக, மாநகராட்சி குறித்த புகார்களை எந்த அலுவலரிடம் தெரிவிப்பது, அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் அறியாமையே நிலவி வந்தது. இந்நிலையில், மக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையிலும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலையும் உள்ளடக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



மாநகராட்சியின் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்ய "https://goo.gl/TPagds"

Newsletter

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...