5 லக்ஷத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் பாதிப்பு, தடுப்பூசி போடுவது அவசியம்


கோவை, நவம்பர் 10: இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200  குழந்தைகள்  நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த நோயிலிருந்து குழந்தைகளைக் காக்க தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்.

கோவையில் இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.



இந்த சந்திப்பின் போது நிமோனியா நோயின் பாதிப்புகளும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது.

 சர்வதேச அளவில் நிமோனியா நோய் ஏற்பட காரணமான ஸ்ட்ரெப்டோகாக்ஸ் நிமோனிக்கா என்னும் பாக்டீரியாவால் இறப்பு சதவிகிதம் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

இந்த நோய் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அதிக அளவில் தாக்குகிறது.

இதுக்குறித்து இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் எம்.இஸ்மாயில் கூறியதாவது, நிமோனியா நோயை தடுக்க தற்போது நம்மிடம் பிசிவி 13 என்ற தடுப்பூசி உள்ளது. இதன் மூலம் லட்சம் குழந்தைகளை இந்த நோயிலிருந்து காக்க முடியும். 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்தியாவில் இந்தாண்டு மார்ச் முதல் தான் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. 2௦18-ம் ஆண்டுக்குள் 9௦ சதவிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

2௦15-ம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200  குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,5௦௦ குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஐக்கிய நாடுகள் திட்டம் மூலம் இந்த ஆண்டில் 21 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோயை தடுக்கும் முறை பற்றி பெற்றோர்களுக்கு இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் சிறப்பான முறையில் எடுத்து கூறிவருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிமோனியா நோயை தடுக்கும் முறை குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகையில், "குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். போதுமான ஊட்டசத்துகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...