சிட் கம்பெனியில் முதலீடு செய்தோர் போலீஸ் ஆபீஸ் முற்றுகை

திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் கொடுத்தும் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைகழிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

கோவை திருச்சி சாலை, சத்தி சாலை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் திரிபுரா சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் மாதம், வாரம், தினசரி என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி தருவதில் கால தாமதம் செய்து வந்த அந்நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு காசோலை வழங்கியுள்ளது. ஆனால் அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அதன்பின்னர் திரிபுரா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தனர். அப்புகாரில் 2 கோடி ரூபாய் அளவிற்கு திரிபுரா சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்திருப்பதாக தெரிவித்தனர். அந்நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை எனவும், இது தொடர்பாக கேட்டால் தொடர்ச்சியாக அலைகழிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு இருபது நிமிடங்களுக்கு மேலாக சாலையை மறித்து நின்றனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்கள் வெளியேயும் உள்ளேயும், செல்ல முடியாமல் நின்றது. இருபது நிமிடத்திற்கு பிறகு வந்த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.



Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...