பண மதிப்பிழப்பு தினம் கருப்பு தினமாக அனுசரிப்பு

கோவை, நவம்பர், 8: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று கருப்பு தினமாக அனுசரித்தனர்.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்தேதியன்று மத்திய பாஜக அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக மேற்கொண்டது. உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, வங்கிகளில் பணமாற்று நடவடிக்கையின் போது முதியவர்கள் உள்ளிட்ட பலர் கூட்ட நெரிசல் மற்றும் இதர விபத்துக்களினால் உயிரிழந்தனர். இதனிடையே, பண மதிப்பிழப்பு அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. 

இந்த தினத்தினை கருப்பு தினமாக அனுசரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம், அஞ்சலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறுகையில், லஞ்சம் ஒழியும், தீவிரவாதத்திற்குச் செல்லும் பணம் தடை படும், கருப்புப் பணம் ஒழியும் என்று பாஜக அரசால் சொன்னவை எதுவுமே நடக்கவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்கள் அவதிக்குள்ளானதுடன் இதுவரை அதன் பாதிப்பில் இருந்து மீளவில்லை. சிறு, குறு தொழில் வணிகர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியினர் சார்பிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...