கோவை, நவம்பர் 8: கோவை மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் வரும் நவம்பர் 10ம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகளை ஆய்வு செய்திட 10 உறுப்பினர்கள் கொண்டு "உள்ளூர் நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு" அமைக்கப்படவுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் நவம்பர் 10ம் தேதியன்று காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணிகளை ஆய்வு செய்திட 10 உறுப்பினர்கள் கொண்டு "உள்ளூர் நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு" அமைக்கப்படவுள்ளது. இதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் நவம்பர் 10ம் தேதியன்று காலை 11 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் ஊராட்சியில் நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.