"கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்"


கோவை, நவம்பர் 7: கோவை, ஒண்டிப்புதூர் அருகே இருகூர் இரயில்வே மேம்பால பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், மேம்பாலத்தின் மீது அதிகளவிலான விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில் இந்த மேம்பாலத்தை திமுக மாநகர தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று ஆய்வு மேற்கொண்டதுடன் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து, அவர் கூறியதாவது:- "இருகூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாததால் தற்போது வரை இங்கு விபத்து ஏற்பட்டு 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் கூட அமைக்கப்படாத அவலநிலை நீடிக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை இந்த மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



திமுக ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாட்டின்போது, அடிக்கல் நடப்பட்ட காந்திபுரம் மேம்பாலம் மக்கள் பயன்படும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் திமுக ஆட்சியில் போடப்பட்ட வரைபடத்தை மாற்றி தனியார் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மாவட்டம் முழுக்க ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கோவையில் தற்போது நடைபெற்று வரும் 7 மேம்பாலப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...