டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்


பல்லடம், நவம்பர் 7: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி விசைத்தறிகளை நிறுத்தி ஊர் பொதுமக்கள் ஆயிரக்கனக்கானோர் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பள்ளபாளையம் பகுதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டது. 

இதனை அடுத்து காளிபாளையத்தில் திறக்கப்பட்ட இக்கடை அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அடைக்கப்பட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தேவராயம்பாளையத்தில் சதீஸ்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் குடியிருந்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகத்திற்கும் டாஸ்மாக் நிர்வாக த்திற்கும் புகார் மனு அளித்தனர். 

இதனிடையே டாஸ்மாக் கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளை நிறுத்தி ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து தனியார் மண்டபத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றவேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

பொதுமக்களின் இப்போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...