கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை, நவம்பர் 7: கலைத் துறையில் சாதனை படைத்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அரசு விருதுகள் பெற விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.

அதன்படி, 18 வயதிற்கு உட்பட்டோருக்கு "கலை இளமணி", 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு "கலை வளர்மணி", 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு "கலை சுடர்மணி", 51 வயது முதல் 60 வயது பிரிவினர்க்கு "கலை நன்மணி", 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு "கலை முதுமணி" என வயதின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிற்பம், நாடக கலைஞர்கள் நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், மரக்கால் ஆட்டம், தெருக் கூத்து ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக்கலைகளைத் தொழிலாகக் கொண்டு கலைத்துறையில் சாதனைபடைத்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்டக் கலை மன்ற விருதாளர் தெரிவுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு அரசு விழாவில் இவ்விருது வழங்கப்படும். தாங்கள் விருது பெற தங்களது சுய விபரக் குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றைக் குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து சான்றுகளுடன் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், அரசு இசைக்கல்லூரி வளாகம், செட்டியாளையம் பிரிவு, மலுமிச்சம்பட்டி (அஞ்சல்), கோவை - 641 050 என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் கோவை மண்டல அலுவலகத்தை 0422- 2610290 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...