2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு

நவம்பர் 7: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தேதியினை மீண்டும் ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் இருந்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த தேதி இன்று (நவம்பர் 7) அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சில ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகள் தயார் செய்ய இன்றும் 3 வாரங்கள் தேவைப்படுகிறது என்பதால் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி  ஷைனி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்களன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பு 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பைப் பாதிக்கும் என்று அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது அத்திருப்தியை   ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...