கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை முயற்சி

கோவை, நவம்பர் 6: கோவையில் கந்து வட்டி கொடுமையால் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செம்மேடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா (35). இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். 

இந்த சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கி முன் நித்யா வீடு கட்டும் பணியை தொடங்கினார். இதற்காக செம்மேடு பகுதியை சேர்ந்த நிஷா என்பவரிடம் ரூ.1.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது.

அதே நேரத்தில் நித்யாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் குறித்த நேரத்தில் கடனை திருப்பிச்செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக நிஷா அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நித்யா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

பணி முடிந்து வீடுதிரும்பிய பாலகிருஷ்ணன் நித்யா மயங்கிக் கிடப்பதை பார்த்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...