கோவை அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து கார் சேதம் : பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமா?

கோவை, நவம்பர் 6: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்ததில் அருகில் நின்று கொண்டிருந்த காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.



கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையின் கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதோடு, நோயாளிகள் தங்குவதற்கான இடவசதி மிகவும் குறைவாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து, அம்மருத்துவமனை வளாகத்தில் ரூ.55 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கியது. தொடர்ந்து கடந்த ஆண்டு புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டன. 

பழைய கட்டிடங்களில் இருந்த பல்வேறு வார்டுகள் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. 

அப்போது நரம்பியல் துறை வார்டும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து பழைய நரம்பியல் துறை வார்டில் அரசு மருத்துவமனை ஆவண காப்பகம் மற்றும் குழந்தைகள் பிரிவு செயல்பட்டுவருகிறது.

இந்த நிலையில், கட்டிடத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 'சன்சைடு' (Sunshade) இன்று மதியம் திடீரென் இடிந்து விழுந்தது. 



இந்த விபத்தில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரின் காரின் முன்பக்க கண்ணடி உடைந்து சேதமடைந்தது. 

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இப்பகுதியில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அம்மருத்துவமனைக்கு வந்துசெல்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் செயல்படும் பழைய கட்டிடங்களில் முதன்மையாக புனரமைக்கப்பட வேண்டிய கட்டிங்களுள் ஒன்றாக நரம்பியல் துறையின் பழைய கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஆனால், இதுவரையில் கட்டிடத்தை புனரமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கவில்லை' என்றார். 

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையில் கட்டிடம் பழுதாகியுள்ளது என்றும், உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ அதிகாரிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களின் அலட்சியப்போக்கை காட்டுவதாகவும் இந்த விபத்திற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...