தங்கத்தை கெமிக்கல் பவுடராக மாற்றிக் கடத்த முயன்ற விமானப் பயணி கைது


கோவை, நவம்பர் 6: வெளிநாட்டில் இருந்து உடலில் மறைத்து தங்கத்தை எடுத்து வந்த பயணியை கோவை விமான நிலையத்தில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 



இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் கோவை வழியாக இந்தியாவிற்குக் கடத்தப்படுவது நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து இன்று அதிகாலை கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 



அப்போது, அப்துல் கரீம்(38) என்ற பயணி, தனது இருகால்களிலும் காயமடைந்ததற்கு மருத்துவக் கட்டு போட்டிருந்தார். அவரது நடையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கரீமை பிடித்து தீவிர சோதனையிட்டனர். அவரது மருத்துவக் கட்டை பிரித்துப் பார்த்த போது, 6 தங்கக்கட்டிகளைப் பொடியாக்கி, கெமிக்கல் பவுடராக மாற்றி அதில் வைத்திருந்தார். இதனைக் கண்டு பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 700 .கிராம். தங்கத் துகள்களை கடத்தி வந்ததை கரீம் ஒப்புக் கொண்டார். அந்த தங்க பௌடெரின் மதிப்பு 26 லட்ச ரூபாயாகும். 



அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில், கோவை விமான நிலையத்தில் மட்டும் ரூ.3.69 கோடி மதிப்புடைய 12.145 கி.கி எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 9.5 கி.கி எடை அளவு தங்கம், இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...