இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் 'பத்மாவதி' திரைப்படத்தை தடை செய்ய விஷ்வ இந்து பரிஷத் மனு


கோவை, நவம்பர் 6: இந்தி திரைப்படமான 'பத்மாவதி' இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதால் அதனை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

"இந்தியில் வெளியாகவுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியின் வரலாறு மறைக்கப்பட்டு உண்மை சம்பவங்களை திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக இத்திரைப்படத்தை குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் திரையிட தடை செய்துள்ளன  .

அதே போல் தமிழகத்திலும் 'சர்ச்சைக்குரிய' இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்."

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...