கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே மரக்குடோனில் மீட்கப்பட்ட 6.5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு, வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

சிறுவாணி அருகே உள்ள ஆலந்துறை பகுதியில் உள்ள கிராமத்தில் குமரன் டிம்பர்ஸ் மற்றும் டிரேடர்ஸ் என்ற மரக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மர இடுக்குகளுக்கு நடுவே மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக, வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் வன அதிகாரிகளுக்கு கடையின் ஊழியர்கள் செய்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், சாதூர்த்தியமாக செயல்பட்டு மலைப்பாம்பை மீட்டு, அட்ர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

சிறுவாணி அருகே உள்ள ஆலந்துறை பகுதியில் உள்ள கிராமத்தில் குமரன் டிம்பர்ஸ் மற்றும் டிரேடர்ஸ் என்ற மரக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மர இடுக்குகளுக்கு நடுவே மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக, வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் வன அதிகாரிகளுக்கு கடையின் ஊழியர்கள் செய்தி தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், சாதூர்த்தியமாக செயல்பட்டு மலைப்பாம்பை மீட்டு, அட்ர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.