கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை, நவம்பர் 4:  கோவையில் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விநியோகித்து செய்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் துடியலூரை அடுத்த அசோகபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிதிரிந்தார். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்தனர்.

அப்போது அந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்பவர் என்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைத்த பொதுமக்கள் அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினர். அதோடு அவரை துடியலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



பிடிபட்ட வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜ்மலூஷன் என்பரது மகன் நீகல்(20) என்பதும். கல்லூரிகள் இருக்கும் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நீகல்-ஐ கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த சூழலில், வாலிபரை பொதுமக்கள் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இதில் அந்த வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...