கோவை, நவம்பர் 4: கோவையில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தே.மு.தி.க.வினர் தெரிவித்துள்ளனர்.
எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், "எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மூடப்பட்ட அரசு மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தாமதமாகும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்", என்றார்.

இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகக் கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் தாமதமாவதைக் கண்டித்து கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகக் கோவை மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பேசிய அக்கட்சியின் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், "எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் மூடப்பட்ட அரசு மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் அவ்வழியே செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், தாமதமாகும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் மக்களைத் திரட்டி தமிழக அரசுக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்", என்றார்.

இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற தே.மு.தி.க.வினரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாகக் கோவை ரயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.