வால்பாறையில் தொடர்ந்து உலா வரும் காட்டு யானைகள் - தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பீதி


கோவை, நவம்பர் 4 : கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் யானைகள், தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். 

வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடின. இதுமட்டுமல்லாமல் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 



இந்த நிலையில், மாணிக்கா எஸ்டேட்டில் உள்ள ரேசன் கடையை காட்டு யானைகள் உடைத்து அரிசி மூட்டைகளைச் சேதப்படுத்தின. அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் கரீம் என்பவரது கடையை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு அங்கு விரைந்த பொதுமக்கள் கூச்சலிட்டு அந்தக் காட்டு யானைக் கூட்டத்தை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். 



இதேபோல, தாய்முடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேயிலை தோட்டத்திற்குள் யானைகள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. உடனே அங்குப் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேறு தேயிலை தோட்டத்திற்குப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பகுதியில் 11 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. அதனை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...