டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி

கோவை, நவம்பர்.3: கோவையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில்  கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் இன்று காலை குழந்தை பலியாகியுள்ளது. 

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. தையற்கலைஞரான இவருக்கு ரய்யான் (2) என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில், அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தையின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். இதை தொடர்ந்து கடந்த 1-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  டெங்குவுக்காக உள்ள தனி வார்டில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை குழந்தை ரய்யான் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...