தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த தகவல்களை வழங்க வரும் 7-ம் தேதி கிராமசபைக் கூட்டம் கூடுகிறது

கோவை, நவம்பர் 3 : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான தகவல்களை வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது. 

2016 - 2017 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் வரும் 07-ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள,  ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார். 

கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்போதி, காட்டம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாத்தூர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கபூலிபாளையம், கல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையூர், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த தணிக்கையை மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல்கள் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11.00 மணியளவில் நடக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...