கோவை, நவம்பர் 3 : தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அன்னூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான தகவல்களை வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடக்கிறது.
2016 - 2017 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் வரும் 07-ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்போதி, காட்டம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாத்தூர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கபூலிபாளையம், கல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையூர், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த தணிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல்கள் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11.00 மணியளவில் நடக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
2016 - 2017 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடந்த மாதம் 30-ம் தேதி முதல் வரும் 07-ம் தேதி வரை சமூக தணிக்கை மேற்கொள்ள, ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்போதி, காட்டம்பட்டி, ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாத்தூர், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளத்துப்பாளையம், பொள்ளாச்சி(வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கபூலிபாளையம், கல்லிப்பட்டி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜல்லிபட்டி, பொள்ளாச்சி (தெற்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழையூர், காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கெம்மரம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த தணிக்கையை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல்கள் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 11.00 மணியளவில் நடக்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.