டாஸ்மாக் கடைக்குள் ஊழியர் பிணம்

திருப்பூர், நவ.3; திருப்பூரில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்படட மதுபானக்கடைக்குள் கடை திறந்த அடுத்த நாளே டாஸ்மாக் ஊழியர் மர்மமான முறையில் மரணம் அடைந்த குறித்து போலீசார் தீவிர விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்களம் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அப்பகுதி கிராம பொதுமக்கள் எதிப்பு காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட்து. 

அதன் பின்னர் காளிபாளையம் பகுதியில் இதே கடையை திறக்க முற்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அங்கிருந்து கடை அகற்றப்பட்டது . 

இதனிடையே டாஸ்மாக்கை, நிர்வாகம் கோம்பக்காட்டை அடுத்த தேவராயம்பாக்களையம் பகுதியில் சதீஸ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதியதாக கடை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தது . 

இதற்கும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று இதே பகுதியில் கடை திறக்கப்பட்டது. 

இந்த கடையில் ஊழியர்களாக ஈரோடு மாவட்டம் முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த தவசியப்பன் மற்றும் தண்டபாணி, ஆரோக்கியசாமி ஆகியோர் விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு கடைக்குள் தவசியப்பனும், கடைக்கு வெளியே கடையின் ஊழியர் ஆரோக்கியசாமி மற்றும் வெளியாட்கள் 2 பேர் என தங்கியுள்ளனர். இதனிடையே காலை வழக்கம்போல் கடையை தட்டி தவசியப்பனை எழுப்ப ஆரோக்கியசாமி முயன்றுள்ளார். இருப்பினும் எந்த பதிலும் உள்ளே இருந்து வராததை அடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் தவசியப்பன் இறந்து கிடந்துள்ளார்.



இதனை கண்டு அதிர்சசி அடைந்த ஊழியர் ஆரோக்கியசாமி இது குறித்து மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தவசியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டு ஒரே நாள் ஆன நிலையில் டாஸ்மாக்கை ஊழியர் மர்மமான முறையில் கடைக்குள் இருந்து பிணமாக மீட்கப்படட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...